10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
01.06.23
கவி இலக்கம்-271
இன்னும் தொடருமா
இந்த வாழ்வு
நச்சுப் பாம்புகள் நாலு பக்கமும்
தாய் மண்ணில் உச்சம் தொடும் வேளை
மிச்சம் மீதியின்றிய வாழ்வில்
சொச்சமும் கூச்சமின்றிக்
கூனிக் குறுகுதே
குடியும் கும்மாளமும் கூத்திட
பொடியும் போதையும் துரத்திட
அடிதடியோ ஆவேஷமாய்
நச்சுப் பாம்புகள் திருகுதே
குண்டு வீச்சிலும் இன அழிப்பிலும்
பிழைத்தது ஏன் என ஏங்குதே
வாழ்ந்த நாட்கள் புரியாது
மாந்தர் வயிறு எரியவே
வாழும் நாட்கள் வீணாகப் போகுதே
தாமும் திருந்தாது
மற்றவரும் திருந்தவிடாது
நாளும் பொழுதும் மூளும்
இந்த வாழ்வு சாகும் வரையிலும்
என்றுந் தொடருமா

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...