ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.10.23
கவி இலக்கம்-286
ஆசிரியம் போற்றுவோம்

ஆரம்ப பள்ளி முதல்
இறுதிப் பட்டப்படிப்பு
வரை படி ஏற்றியவர்

அடைக்கலம் தந்து
பாதுகாப்புக் கொடுத்து
அறிவொளி ஊட்டியவர்

வினாவுக்கு வினா தொடுத்து
எம்மிலே விடை எடுத்து
வீரியம் தந்த வித்தகர்

கலை,விளையாட்டுத்துறை,
நன்னடத்தை எதிலும் வழி
நடத்திய போற்றத்தக்க
பெரியோர்

எவ்வளவு அக்கறை எம்மில்
எக் கறையும் பிடிக்க விடாது
அக்கறையாய்ப் படிப்பில் கவனம்
எடுத்துக் கரை சேர்த்த
அற்புதக் கொடையாளிகள்

என்றும் வழிகாட்டியவர்
இன்றும் விழியில்
முட்டி முட்டி நிற்பவர்

என்றென்றும் அன்பு
கலந்த நன்றி மறவாது
ஆசிரியம் போற்றுவோம்
போற்றுவோம் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading