” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.10.23
கவி இலக்கம்-286
ஆசிரியம் போற்றுவோம்

ஆரம்ப பள்ளி முதல்
இறுதிப் பட்டப்படிப்பு
வரை படி ஏற்றியவர்

அடைக்கலம் தந்து
பாதுகாப்புக் கொடுத்து
அறிவொளி ஊட்டியவர்

வினாவுக்கு வினா தொடுத்து
எம்மிலே விடை எடுத்து
வீரியம் தந்த வித்தகர்

கலை,விளையாட்டுத்துறை,
நன்னடத்தை எதிலும் வழி
நடத்திய போற்றத்தக்க
பெரியோர்

எவ்வளவு அக்கறை எம்மில்
எக் கறையும் பிடிக்க விடாது
அக்கறையாய்ப் படிப்பில் கவனம்
எடுத்துக் கரை சேர்த்த
அற்புதக் கொடையாளிகள்

என்றும் வழிகாட்டியவர்
இன்றும் விழியில்
முட்டி முட்டி நிற்பவர்

என்றென்றும் அன்பு
கலந்த நன்றி மறவாது
ஆசிரியம் போற்றுவோம்
போற்றுவோம் .

Nada Mohan
Author: Nada Mohan