ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.12.23
ஆக்கம் -126
கலவரம்

உலக வாழ் உயிரினமதில்
பல்வேறு கோலமுடன் ஊதிக்
கரைக்கப்படும் கலவரம்

காலங்காலமாய் கலகமிடும்
தமிழ் ,சிங்கள ,முஸ்லீமில்
சிதைக்கப்படும் போராட்டம்

அங்குமிங்கும் எங்கும் பதவி
ஏங்கும் ஆட்சி நாற்காலியில்
நிரந்தரத் தளர்வாட்டம்

பொங்கிப் பொங்கி எழுந்து
போட்டியிடும் மதவாதிகள்
கண்ட இடமெலாம் குண்டு
வெடிப்பு வெறியாட்டம்

என்னவொரு வேதனை
ஏனிந்தப் பெரு சாதனை
மனமோடு ஆராதனை
காணுமிந்தக் கலவரமே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading