ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.12.23
கவிதை இலக்கம் -295
கற்றுத் தந்த பாடம்

சுதந்திரச் சூறாவளியே !
உனக்கு ஏன் எதற்கு
இவ்வளவு ஊமைக் கோபம்

தந்திரமாகும் தட்ப வெப்பம்
தாறுமாறாகத் துரத்தும்
தீராத கொலைவெறித் தாபம்

இருந்த வீடு,காணி,உறவு
சொத்தெல்லாம் பெய்த
மழை வெள்ளத்தில்
அடித்துச் சென்ற பிரளயம்

காத்திருந்த உயிரோடு
ஆடு,மாடு உயிரினங்களும்
கூக்குரலோடு புதை குழியில்
புதைந்ததே

ஏழை,பணக்காரனின்றி
மிக்ஜாம் புயல் எனும்
சுற்றிய சூறாவளி
முறித்துச் சிதைத்ததே

சொட்டுக் காணிக்கு
விட்டுக் கொடுக்காது
அடிதடி சண்டையில்

கோடேறியவர்க்கு
இயற்கை கற்றுத்
தந்த பாடமாகுமோ ?

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading