கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.12.23
கவிதை இலக்கம் -295
கற்றுத் தந்த பாடம்

சுதந்திரச் சூறாவளியே !
உனக்கு ஏன் எதற்கு
இவ்வளவு ஊமைக் கோபம்

தந்திரமாகும் தட்ப வெப்பம்
தாறுமாறாகத் துரத்தும்
தீராத கொலைவெறித் தாபம்

இருந்த வீடு,காணி,உறவு
சொத்தெல்லாம் பெய்த
மழை வெள்ளத்தில்
அடித்துச் சென்ற பிரளயம்

காத்திருந்த உயிரோடு
ஆடு,மாடு உயிரினங்களும்
கூக்குரலோடு புதை குழியில்
புதைந்ததே

ஏழை,பணக்காரனின்றி
மிக்ஜாம் புயல் எனும்
சுற்றிய சூறாவளி
முறித்துச் சிதைத்ததே

சொட்டுக் காணிக்கு
விட்டுக் கொடுக்காது
அடிதடி சண்டையில்

கோடேறியவர்க்கு
இயற்கை கற்றுத்
தந்த பாடமாகுமோ ?

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading