ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Raani sampanthar

11.01.24
கவி இலக்கம் -298
மனிதா நீ விழித்தெழு

எழும்போது நீ விழுகின்றாய்
விழும்போது எழுகிறாய்
நீந்தும் நினைவுகளோ
கனவுகளுடன் கண்ணீரில்

விழுபவனைத் தூக்கி நிறுத்த
கை கொடுக்க மறுப்பவன்
விழுந்து விழுந்து சிரிக்கிறான்
கிறுக்குப் பிடித்தவன் போல்

சுத்தமில்லாக் கண்கள் குளிர
நல்ல மன மாந்தர் சந்திக்குமா
பற்றிப் பற்றி எரியும் வயிறு
வத்திப் பெட்டியை சிந்திக்குமா

விழித்தெழு மனிதா விழித்தெழு
வாழ்வுக்காலம் மிகக் குறுகியதே
கோலம் மாறி அலங்கோலமாய்
மாற முதலே நீ மாறிடு மனிதா .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading