ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.03.24
கவி இலக்கம்-307
விடியாத இரவொன்று

அடியாத மாடு படியாதென்றும்
முடிவிலா அரசியல் மாறாதென்றும்
துடிதுடித்து மரணிக்கும் மாந்தர்

கூழும் கஞ்சியும் குடிப்பினும்
வாழும் பொழுது நிம்மதி
குடித்துக் குடித்து மது, போதை
அடிமையாகும் சமுதாயம்

பள்ளி மாணவர் சீரழிய
படித்துப் பட்டமானவர்
வேலையின்றிப் பிழிய
பிடிக்கும் நோயுடன்
வெடிக்கும் வெட்டுக் குத்து

எப்போ சுதந்திரமென ஏங்கும்
காலைப் பொழுதில் மங்கும்
மாலைப் பொழுது

யாரைக் கடிந்து கொள்வது
வேரிலே விஷம் போரிலே
மாண்ட வேதனைக் கண்ணீர்
மிதக்கும் சோதனையில்
என்றும் விடியாத இரவொன்று .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading