சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.05.22
ஆக்கம்-228
எண்ணம்
இதயத்தில் தேக்கிய ஆசையால்
ஓரு தாய் கர்ப்பம் சுமப்பது போல் சுமந்து
என்றாவது ஓரு நாள் அந்தக் கரு
அபாரமாய் பெரிதாய் வளர்ந்து
உருவம் பெற்று வெளியில் வந்து விடும்

எண்ணத்தில் என்னென்னவோ ஆசைகள்
வர்ணத்தில் பறக்கும் பட்டாம் பூச்சிகள்
ஓரேயொரு கணத்தில் எதிர்காலம்,நிகழ்காலம்
எம் கையில் இல்லாது பறந்தே போயிடும்

விதியை வெல்ல முடியும் எனச் சொல்லுபவரே
விதி வழியே இறந்து விடுவதும்
எம் தலையில் எதுவுமில்லையே
மனதில் தாங்கிடும் எண்ணச் சுமைகள்

Nada Mohan
Author: Nada Mohan