ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.06.22
அவசர வாழ்வு
ஆக்கம்-230
நாழும் பொழுதும் நேரம் பாராது
உண்ணாது உறங்காது ஊமையாய்
ஓய்வின்றி உழைத்து வாழும் மனிதன்
உறக்கத்திலே உயிர் துறக்கும்
விதம்விதமான துயரங்கள்

எத்தனை ஆசைகளில் மனதின் தேம்பல்
இத்தனையும் இனி நடக்குமா என விசும்பல்
ஏழையாயிருந்தும் அன்று அத்தனை மகிழ்ச்சி
ஆனாலின்று எல்லாமிருந்தும் ஏனிந்தப் புலம்பல்

இருப்பது போதுமென்று மனம் நிறையாது
இன்னுமின்னும் வேணுமென்ற பேராசை
அத்தனை வலி சுமந்து வருத்தம் துறந்து
விரலுக்கேற்ற வீக்கம் மறந்து இதய
யுத்தமுடன் போராடி

அற்ப வயசில் உயிர் குடிக்கும்
அவசர வாழ்வில் புத்தம் புதிய
உலகந் தேடிடுவாரே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading