29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
09.07.24
ஆக்கம் 154
அத்திவாரம்
சின்னக் காணி சீர் வரிசைச் சீதனம்
பன்னக் காணி பனை வேர் தறித்த சேதனம்
பென்னம் பெரியதோர்
மனை தொடரப் பேரானந்தமே
அன்னமிட்டு வளர்த்த
பெற்றோர் சொன்ன
வார்த்தை மாற்றாது
மங்கல விளக்கேற்றி
மூலதனமிட்ட அஸ்திவாரம் ஆனந்தமே
என்னென்னவோ திட்டம்
முன்னுக்குக் கிணறு
பின்னுக்குத் தோட்டம்
யன்னலருகே சமையல்,
குளியலறை என
இன்னுமின்னும் எண்ணி அஸ்திவாரம்
இட்ட ஆதீனம்
இன்று கண்ணுக்குள்
நிற்கும் ஆனந்த பவனம்
ஆனதே .
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.