” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

ராணி சம்பந்தர்

09.07.24
ஆக்கம் 154
அத்திவாரம்

சின்னக் காணி சீர் வரிசைச் சீதனம்
பன்னக் காணி பனை வேர் தறித்த சேதனம்
பென்னம் பெரியதோர்
மனை தொடரப் பேரானந்தமே

அன்னமிட்டு வளர்த்த
பெற்றோர் சொன்ன
வார்த்தை மாற்றாது
மங்கல விளக்கேற்றி
மூலதனமிட்ட அஸ்திவாரம் ஆனந்தமே

என்னென்னவோ திட்டம்
முன்னுக்குக் கிணறு
பின்னுக்குத் தோட்டம்
யன்னலருகே சமையல்,
குளியலறை என
இன்னுமின்னும் எண்ணி அஸ்திவாரம்
இட்ட ஆதீனம்
இன்று கண்ணுக்குள்
நிற்கும் ஆனந்த பவனம்
ஆனதே .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading