பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர்

09.07.24
ஆக்கம் 154
அத்திவாரம்

சின்னக் காணி சீர் வரிசைச் சீதனம்
பன்னக் காணி பனை வேர் தறித்த சேதனம்
பென்னம் பெரியதோர்
மனை தொடரப் பேரானந்தமே

அன்னமிட்டு வளர்த்த
பெற்றோர் சொன்ன
வார்த்தை மாற்றாது
மங்கல விளக்கேற்றி
மூலதனமிட்ட அஸ்திவாரம் ஆனந்தமே

என்னென்னவோ திட்டம்
முன்னுக்குக் கிணறு
பின்னுக்குத் தோட்டம்
யன்னலருகே சமையல்,
குளியலறை என
இன்னுமின்னும் எண்ணி அஸ்திவாரம்
இட்ட ஆதீனம்
இன்று கண்ணுக்குள்
நிற்கும் ஆனந்த பவனம்
ஆனதே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading