சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

29.10.24
ஆக்கம் 164
சலவை

அடிமேல் அடி விழுந்து
வாடி வதங்கித் துவண்ட
கோடி உழைப்பாளியில்
வியர்வை ஆனதே

பிடிக்கும் பிடியில்
துடிக்கும் துணியில்
குடிக்கும் சாறு பிழிய
வடிக்கும் கண்ணீர்
கோர்வை ஆனதே

கோடி மாந்தர் உடு புடவை, வேட்டி சால்வை
துவைத்து கொடி கட்டித்
தொங்க வைத்துத் தேடிடும் தோழமையின்
காணிக்கை போனதே

நாடி நின்று தேடிக் கொன்றது மூளைச்
சலவை செய்த தோயல்
இயந்திரம் இரண்டு கைகள் ஆனதே

உழைப்பாளியில் ஊனமாய் வயிற்றில்
அடித்து மௌனமாய்
வேட்டு வைத்ததே என
சலவைத் தொழிலாளி
வெந்து புலம்பியது
நொந்து வேடிக்கை
ஆனதே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan