28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ராணி சம்பந்தர்
29.10.24
ஆக்கம் 164
சலவை
அடிமேல் அடி விழுந்து
வாடி வதங்கித் துவண்ட
கோடி உழைப்பாளியில்
வியர்வை ஆனதே
பிடிக்கும் பிடியில்
துடிக்கும் துணியில்
குடிக்கும் சாறு பிழிய
வடிக்கும் கண்ணீர்
கோர்வை ஆனதே
கோடி மாந்தர் உடு புடவை, வேட்டி சால்வை
துவைத்து கொடி கட்டித்
தொங்க வைத்துத் தேடிடும் தோழமையின்
காணிக்கை போனதே
நாடி நின்று தேடிக் கொன்றது மூளைச்
சலவை செய்த தோயல்
இயந்திரம் இரண்டு கைகள் ஆனதே
உழைப்பாளியில் ஊனமாய் வயிற்றில்
அடித்து மௌனமாய்
வேட்டு வைத்ததே என
சலவைத் தொழிலாளி
வெந்து புலம்பியது
நொந்து வேடிக்கை
ஆனதே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...