” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

29.10.24
ஆக்கம் 164
சலவை

அடிமேல் அடி விழுந்து
வாடி வதங்கித் துவண்ட
கோடி உழைப்பாளியில்
வியர்வை ஆனதே

பிடிக்கும் பிடியில்
துடிக்கும் துணியில்
குடிக்கும் சாறு பிழிய
வடிக்கும் கண்ணீர்
கோர்வை ஆனதே

கோடி மாந்தர் உடு புடவை, வேட்டி சால்வை
துவைத்து கொடி கட்டித்
தொங்க வைத்துத் தேடிடும் தோழமையின்
காணிக்கை போனதே

நாடி நின்று தேடிக் கொன்றது மூளைச்
சலவை செய்த தோயல்
இயந்திரம் இரண்டு கைகள் ஆனதே

உழைப்பாளியில் ஊனமாய் வயிற்றில்
அடித்து மௌனமாய்
வேட்டு வைத்ததே என
சலவைத் தொழிலாளி
வெந்து புலம்பியது
நொந்து வேடிக்கை
ஆனதே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan