பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர்

12.11.24
ஆக்கம் 166
சூர வதை

அசுரனுக்குப் போதை
இறுமாப்பு
சூரனுக்குப் பாதை துரும்பு
நரகாசுரனுக்கு நரம்பு
வதைவதைப்பு

சூர அரக்கன் இந்திர
ஞாலத் தேர் சுற்றிச்
சிதைத்த கழிப்பு
அகோர அரக்கர்
ராஜபக்ஷர் தந்திரக்
குண்டு விமான இன
வெறி தொற்றி எறிகணை அழிப்பு

சூர வதை கதிர்காம
முனைத்திருப்பு
கோர மமதை வல்லரசுக் கூட்டு
முனைத்திரிப்பு

நன்னீர்க் கடலில்
அங்கு ஆழ்த்திய
சேனைப்படைப்பு
நந்திக் கடலில் இங்கு
அமிழ்த்திய துப்பாக்கி
முனைப்பு

கண்ணீரில் தத்தளித்து
மிதந்த தமிழனில் பதை
பதைத்துப் புதைந்த சூர
வதை தாய் மண்ணின்
நெஞ்சில் சுட்ட ஆறாக்
காயங்களே .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading