பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர்

17.12.24
ஆக்கம் 171
இதயம்

காதலின் பிறப்பிடம்
மோதலின் முறைப்பிடம்
சாதலின் நிரப்பிடம்
இன்ப துன்ப சேர்தலில்
தரிப்பிடம்

அது எதுவோ உடலிது
காவிடும் உயிரின்
துடிப்பிடம்

கல்லுப் பிள்ளையார்
போலில்லாது அல்லும்
பகலும் ஓய்வின்றியே
டொக், டொக்கெனத்
திக்கு முக்காடி விழித்திடும் இதயம்

அன்பு, கருணை, உணர்வின் வசிப்பிடமே
கொதி, கோபம் சுமக்கும் பொறுமை
கருவிடமே

பிரிய மனமிலாது
உயிர் ஊசலாடும்
தறுவாயிலும் ஆடி
அடங்கித் துடியாய்த்
துடித்திடும் துணிவான
இருதய இதயம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading