” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

17.12.24
ஆக்கம் 171
இதயம்

காதலின் பிறப்பிடம்
மோதலின் முறைப்பிடம்
சாதலின் நிரப்பிடம்
இன்ப துன்ப சேர்தலில்
தரிப்பிடம்

அது எதுவோ உடலிது
காவிடும் உயிரின்
துடிப்பிடம்

கல்லுப் பிள்ளையார்
போலில்லாது அல்லும்
பகலும் ஓய்வின்றியே
டொக், டொக்கெனத்
திக்கு முக்காடி விழித்திடும் இதயம்

அன்பு, கருணை, உணர்வின் வசிப்பிடமே
கொதி, கோபம் சுமக்கும் பொறுமை
கருவிடமே

பிரிய மனமிலாது
உயிர் ஊசலாடும்
தறுவாயிலும் ஆடி
அடங்கித் துடியாய்த்
துடித்திடும் துணிவான
இருதய இதயம்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan