” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

18.02.25
ஆக்கம் 177
முகமூடி

முகமூடி கொண்ட
உலகமிது
கொள்ளையர் கண்ட
ஆயுதமது
முகமூடி என்றதும்
கள்ளர் ஞாபகம்
வந்திடுமே

கன்னம் வைத்துத் திருட கறுப்புத் துணி
முகமும் மறைய
மூடிடுமே

மானிடர் பற்பல நேரங்களில் பல
கோணங்களில்
அரசியல்வாதி போல்
உண்மை ஒழித்துப்
பொய் உரைத்து
முகத்திரை போட்டிடுவரே

பானையில் எஞ்சிய
சோறு பிள்ளைகளில்
பகிர்ந்தளித்துத் தான்
நீர் அருந்தி வயிறு
நிறைந்து விட்டது எனப்
புன்சிரிப்பு முகமூடி
தருவதும் வறுமை
எனும் கொடுமையின்
அங்கமே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan