கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

ராணி சம்பந்தர்

25.02.25
ஆக்கம் 178
நம்பிக்கை

அன்று நம்பிக்கையே
தும்பிக்கை போலானது
இன்று அவநம்பிக்கை
அணைக்கின்ற கடுஞ் சூழலானது

நாகரீக உலகில் பயங்கரம் பயணிக்க
நடந்தவை நடப்பவை
நினைத்திடவே நீந்தி
வர முடியாதென மனம்
தழும்புகிறது

நாட்டு நடப்பெல்லாம்
நீதியின்றிய அநீதியே
நடுவர் முன்னே நரபலி

கண் கட்டிய நீதி தேவதை வெந்து போய்
நம்பிக்கையை நொந்து
திட்டித் திட்டிக் கதறி
அழுதது

அநாகரீக வழியில் களம் சேர்க்க மெல்லக்
காய் நகர்த்தும் ஆழமான கழுகுகள்

அடாவடித்தனம் மீண்டும் தலைதூக்கி
போராடும் இரத்த
வெறியில் இரக்கம்
அற்ற நம்பிக்கை
வேண்டுமென மானிடரில் நினைந்திடுமா ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading