சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

25.02.25
ஆக்கம் 178
நம்பிக்கை

அன்று நம்பிக்கையே
தும்பிக்கை போலானது
இன்று அவநம்பிக்கை
அணைக்கின்ற கடுஞ் சூழலானது

நாகரீக உலகில் பயங்கரம் பயணிக்க
நடந்தவை நடப்பவை
நினைத்திடவே நீந்தி
வர முடியாதென மனம்
தழும்புகிறது

நாட்டு நடப்பெல்லாம்
நீதியின்றிய அநீதியே
நடுவர் முன்னே நரபலி

கண் கட்டிய நீதி தேவதை வெந்து போய்
நம்பிக்கையை நொந்து
திட்டித் திட்டிக் கதறி
அழுதது

அநாகரீக வழியில் களம் சேர்க்க மெல்லக்
காய் நகர்த்தும் ஆழமான கழுகுகள்

அடாவடித்தனம் மீண்டும் தலைதூக்கி
போராடும் இரத்த
வெறியில் இரக்கம்
அற்ற நம்பிக்கை
வேண்டுமென மானிடரில் நினைந்திடுமா ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan