நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

ராணி சம்மந்தர்

26.11.24
ஆக்கம் 168
உயிர்க் கொடை

சாவுக்கு சவால் காட்டியவன்
காவு கொள்ளும் உயிர்
அவாவை விடக் கூவித்
தேம்பும் தன் இனம் மேவிய துச்சமென
நிலை நாட்டியவன்

தமிழீழப் போராட்டமதில் தன்
பாத்திரம் அறிந்து
கூலிப்படையைச் சுட்டு
வீழ்த்திச் சரித்திரம்
கூட்டியவன்

விடியல் ஒன்றைத் தேடி
விடுதலை விடுவிக்க
உணவு, களைப்பு,
ஓய்வு இன்றி
வேங்கை போல் பாய்ந்து இறுதி மூச்சு வரை போராடிக் களம்
குதித்த மாவீரனே !

எத்தனை ஆற்றலில்
அத்தனை புதுமை
இத்தனையிலும்
உயிர்ப்போடு நாடிய
தீபச் சுடர்த் தியாகிகளே

கார்த்திகை 26 இல்
காத்திருந்து நினைவு
கூறி பாமாலை எனும்
பூமாலையிட்டு வணங்கும் உயிர்க்
கொடையாளிளே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan