வசந்தா ஜெகதீசன்

வாழ்த்துக்கவி…
ஈர்நுாறாய் இலக்கெட்டி
இன்று வாரம் இருநுாறாய்
தொட்டுயரும் வெற்றி வாகை
தொடர்கின்ற கவித்துவமும்
விதையூன்றும் வேர்நிலமே
பாமுகத்து படர்கொடியில்
சந்தம் சிந்தும் சரிதமே

பெற்றுயரும் பேறுகளில்
பெருமிதத்துச் சான்றுகளில்
வடம்பற்றி வரிதொடுத்து
வாழ்த்துரைத்து நயம்பிழிந்து
தொடர்பணியில் துல்லியமாய்
களம்பற்றும் காவியமாய்
நீண்டுயர்க நீடுயர்க
பாமுகத்து வனப்பிலே
பாவை அண்ணா தொடுப்பிலே
பலராக்கும் வாழ்த்திலே
புனைகவியே புத்தொளியே
வாழிய நீ பல்லாண்டு
வளர்முகமாய் நீ நீண்டு!
நன்றி மிக்கநன்றி

200வது வாரத்தின் உயர்வு
இணைவுடன் பாமுக அதிபர் அவர்கட்கும் பாவைஅண்ணா தனித்துவ தட்டிக்கொடுப்பில்
சந்தம் சிந்தும் கவி மிடுக்குடன்
வெற்றித் தொடுகையில் வீறுகொள்ளும் வேளை
“துலங்கட்டும் தூரிகைகள்”
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading