மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வாழ்த்துக்கவி…
ஈர்நுாறாய் இலக்கெட்டி
இன்று வாரம் இருநுாறாய்
தொட்டுயரும் வெற்றி வாகை
தொடர்கின்ற கவித்துவமும்
விதையூன்றும் வேர்நிலமே
பாமுகத்து படர்கொடியில்
சந்தம் சிந்தும் சரிதமே

பெற்றுயரும் பேறுகளில்
பெருமிதத்துச் சான்றுகளில்
வடம்பற்றி வரிதொடுத்து
வாழ்த்துரைத்து நயம்பிழிந்து
தொடர்பணியில் துல்லியமாய்
களம்பற்றும் காவியமாய்
நீண்டுயர்க நீடுயர்க
பாமுகத்து வனப்பிலே
பாவை அண்ணா தொடுப்பிலே
பலராக்கும் வாழ்த்திலே
புனைகவியே புத்தொளியே
வாழிய நீ பல்லாண்டு
வளர்முகமாய் நீ நீண்டு!
நன்றி மிக்கநன்றி

200வது வாரத்தின் உயர்வு
இணைவுடன் பாமுக அதிபர் அவர்கட்கும் பாவைஅண்ணா தனித்துவ தட்டிக்கொடுப்பில்
சந்தம் சிந்தும் கவி மிடுக்குடன்
வெற்றித் தொடுகையில் வீறுகொள்ளும் வேளை
“துலங்கட்டும் தூரிகைகள்”
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading