வசந்தா ஜெகதீசன்

பாத்திரங்கள்...

அனுதின வாழ்வின் அத்தியாயம்
அகிலத் தேரின் அணிகலனே
மனித வாழ்வை உராய்ந்தெழுதும்
மாற்று முகங்கள் பலநூறு
செதுக்கும் வாழ்வின் உளியாகி
சீர்பட்ட சிலையை வெளியாக்கும்
சிற்சில தருணத்தின் முகமூடி
சிந்திக்க மறுக்கும் நியாயவாதி
நட்பின் எத்தனம் பலதிசையில்
நலிந்தே குன்றும் தேய்பிறையாய்
வாழ்வில் உருளும் நிலை மேன்மை
வற்றாச் சுரங்க வளம் புதுமை
போடும் வேஷம் அவரவர்க்கு
புவியில் வாழும் தலைமுறைக்கு
பாடம் கூறும் படிப்பினைகள்
பட்டறிவும் ஞாலப் போதனைகள்
சுழலும் அவனி வரலாற்றில்
சுமப்போம் பற்பல பாத்திரங்கள்
காலம் தந்த போர்வைக்குள்
வேடம் தாங்கிய பறவைகள் நாம்
ஈழவேரின் அடித்தளத்தில்
இடம்பெயர்ந்த வாழ்வும் பாத்திரமே
அகதியென்னும் அட்சயமாய் அகில பரிதி உறைவிடமாய்
அணிந்தே தரித்திடும் மானிடர் நாம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading