நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

காலத்தின் தூரிகை

காலத்தின் தூரிகை…
வரைந்தெழுதும் வரைமுறையில்
வரம்பிடுமே தூரிகை
வண்ணத்துக் கோலமாக்கி வனப்பாக்கும் உலகினை
காலத்தின் தோகைக்குள் கச்சிதமாய் அழகு
கலங்கரையாய் உலகினை கவர்கின்ற மிளிர்வு

பயிர்ச்செடிகள் வளர்ந்தாகும்
பசுமையின் செறிவு
பருவத்தின் கூறுகள் நான்காகும்
ஆண்டு

விலத்தாது விதவிதமாய் விதைப்பாகும் விளைவு
வியாதியே உலகாளும் விநோத
நிகழ்வு
இயற்கையின் இயல்போடு இடர்கிறது முடக்கம்
செயற்கையின் செல்வாக்கில்
செல்கிறதே நகர்வு

பருவத்தின் மாற்றம் போல்
படருமே பலது
காலத்தின் தூரிகை காட்டுகின்ற
வலிமை
ஞாலத்தின் வரைகோடு தாண்டுமே உலகை

சுற்றுகின்ற நேரத்தில் இவ்வாரம்
மாற்றம்
சுழன்றோடும் காலத்தின் தூரிகை
தீட்டுகின்ற தோற்றம்

வண்ணத்தை எண்ணமாய் வரம்பிடுவோம் வகுத்து
வரலாறு நிமிர்வாகும் காலத்தைக் கணித்து!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan