வசந்தா ஜெகதீசன்

காதலின் கலப்பு..
பதியமிடாத பார்வைக் கலப்பு
பாசமாய் படரும் பற்றின் பிடிப்பு
ஆழமறியாத அன்பின் மதிப்பு
ஆராவாரத்தின் அடைக்கல மகுடம்
தாயின் அன்பிலும் தனித்துவம்
தக்க காதலே மகத்துவம்
ஈரஅகத்தின் இருப்பிடத் தேவதை
இயல்பில் மனித வாழ்வியல் முத்திரை
காதல்கலப்பே கருணை உளமே
காத்திட வாழ்வின் கரிசனம் மெய்யே.!
நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading