சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வாழ்வியல் கலை தொடரா நிலை....

வாழ்வியல் கலை
தொடரா நிலை….
வாழ்வியல் கலையே வற்றாத பொய்கை
வரலாறு செப்பும் தமிழரின் தொன்மை
நாட்டுபுறத்தின் கலைகளின் கூற்று
வீரத்தின் உணர்வும் வினைத்திறனும்
கலைகளின் கூட்டும் கச்சேரி வடிவும்
காவடி கரகம் கும்மி கோலாட்டம்
பற்பல பழமை ஆற்றலில் குன்றி
ஆளுமை சிதைந்து போற்றலின்றி
போகுதே கலைகள் ஈட்டம் காணும்
இன்றைய நிலையேன்
பழமையின் பாடுகள் அறியா வாழ்வா
கலைகளின் தொன்மை துலங்கா வரமா
மனதின் மதிப்பை இசையின் திறனை
மகிழ்ச்சி நிறைவை காத்திடமாக காக்கும்
மரபு போக்கிடமின்றி புதைந்து சிதையுது
வேரினமின்றி வேற்றுமையாகுது.
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading