மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உறவுமுறை உரிமமே….
பேறுகள் பலதில் பெரும்பேறிது
கிட்டிடும் பதவியில் கிடைத்தற்கரியது
பெண்ணினப் பிறப்பில் உறவுகள் விரியும்
தன்னிலை வாழ்வில் தக்கதாய்
தொடரும்
எண்ணியே மகிழும் சுற்றத்தின் உறவு
சொல்லியே அழைக்கும் முறைகளின் பரிவு
அன்பிலே திளைக்கும் அளப்பெரும் சொத்து
அன்னைக்கு நிகராய் ஆனது ஏது
சேயாய் மகளாய் அக்காவாய் தங்கையாய்
உடனாய் தொடருமே உரிமத்தின் பாசம்
மருமகளாகிட மற்றொரு நேசம்
மனைவியாய் தாயாய் மாமியாய் பாட்டியாய் பூட்டியாய்
மகுடங்கள் சூடும்
பெண்ணினப் பேறே பெருமிதமாகும்
பேறுகள் பலதை ஆவணமாக்கும்
உறவுமுறைகள் உரிமத்தின் உறுதி
உதிரத்தின் உறவாய் உரம்பெறும் நியதி!
வாழ்க்கை அரணின் வரம்பே மிகுதி!
வலிமை பெற்றுயர் பெண்ணாய் வாழ் நீ!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan