மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

இனியென்ன இளவேனில்…

விழுமியங்கள் தாங்கிய விளைநிலத்தின் விருட்சங்கள்
அழுகின்ற அவலத்தில் அத்திவாரப் பலமிழந்தோம்
அங்கங்கள் துண்டாட அவயவங்கள் செயலிழக்க
குமுறும் மனக்கொதிப்பில் கொந்தளிக்கும் அலையானோம்

எழுகைக்கு உதவியில்லை ஏற்றத்திற்கு வழியுமில்லை
அழுகையின் குரல்களோ அடங்கிய நிலையுமில்லை
பாதியிலே பட்ட ரணம் பாதிப்பில் தமிழர் இனம்
முள்ளிவாய்க்காலில் முற்றாகத் தகர்ந்தோமே

முழுநிலவு வாழ்வியலோ முழுதாக இருண்டது
ரணமானோம் வாழ்விலே பிணமானோம் பிடிப்பிலே
ஆறாத ரணங்களே அகத்திற்குள் ஏராளம்
விழுப்புண்ணின் உணர்வோடு விம்முகின்ற உறவுகளை

வதைபட்ட காயத்துடன் வரட்சி கொள்ளும் இனத்தவரை
கலங்கரை விளக்காகி கரம்பற்றல் ஒளியாகும்
ஆறுதல்த் துடுப்பாகி கரைசேர்த்தல் வழியாகும்
போரின் வலிகள்தான் புறந்தள்ளி ஒய்ந்ததென

புலத்தில் வாழும் நாம் விலத்திடல் வேண்டாமே
புதுயுகத்தின் யாத்திரைக்கு புத்தூக்கம் நாமாவோம்
மறுபதிப்பின் வாழ்வியலை அரங்கேற்ற அச்சவோம்.
மனிதத்தின் நேயமே மாற்றீட்டுக் காப்புறுதி
உள்ளத்தின் குமுறலுக்கு
உதவுதலே ஒற்றைவழி!.

நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading