இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

முள்ளிவாய்க்கால்…
வெட்டவெளி மையானம்
வெறுமையான சுடுகாடு
அவலக் குரலொலிகள்
நிஜமான இனஅழிப்பு
நிர்க்கதியாய் தமிழினம்
பூண்டோடு அழித்திட்ட மே பதினெட்டு
இதயரணம் காயாது
மரணித்த வேதனையில்
மாண்டு துடிக்கிறது
மனிதநேயக்கதவுகள்
இருண்ட பேரவலம்
மயான பூமியாய்
முள்ளிவாய்க்கால்
மறக்கத்தகுமா மே பதினெட்டு
ஈழத்தின் வேரிலே
இனஅழிப்புக்கோரம்
குருதி ரணமாய்
குற்றுயிர் வதையாய்
கட்டுண்டு மாண்ட
காயவலிகள்
மறக்கத்தகுமா மே18
மனிதமே எங்கே
மாண்டுபோனாய்.
குமுறும் அலையாய்
கொன்று குவித்தார்
எழுகை பெற்றிட ஏது வழி
அவலம் குன்றி அகலும் வலி!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading