இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அகதி நாம் பெற்ற வரமா …
நிலத்தில் பூத்தகொடி
புலமதில் புகுந்த செடி
வரமது அகதியாய் வாங்கிய கொடையா
வரட்சியில் வரண்டிடும்
நிலத்தினை போல
வாழ்வில் ஒட்டிய பெயரே அகதி
வாழ்ந்தகம் விட்டகன்று
வேற்றகம் வீழ்ந்தெழுந்து
பெற்றவை பெரும்பாடம்
பேறெனச் சுமப்பவை பேரவலம்
அகதியின் முகவரி
அடித்தளமிட்டது
அடுத்தலைமுறை
படிமுறையானது
அகதி என்னும் முத்திரை
அகற்றிட முடியா யாத்திரை
தஞ்சமென்னும் கோரிக்கை
தந்திடும் பெயரே நிரந்தரம்
அகதி என்னும் நாமமே
அடைக்கலமானது ஞாலத்தில்
அடையும் உயர்விலும் இடம்பிடித்து
நகரும் நிழல்போல் நம்மோடு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading