இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பள்ளிக்காலம்….
பருவங்கள் பலதாய்
பள்ளிக்காலம் முதலாய்
பழகிய பண்புகள் உயர்வாய்
படருதே வாழ்வாய்
அழகிய கோலம்
அழித்து அழித்து “அ” எழுதிய
காலம்
வரைமுறையற்ற வாழ்க்கைப் பாடம்
வரமாய் கிட்டிய கல்வியின் சாரம்

சுமையே அற்று சுதந்திர உலகில்
பறவைகள் போல பாடிப் பறந்தோம்
உயர்வுகள் கிட்ட உலகையே மறந்தோம்
அன்பில் நட்பு ஆட்சியில் வானம்
எல்லைகளற்ற பள்ளியின் காலம்
இனிதே மலர்ந்த வாழ்வின் வசந்தம்
இனியும் வருமா இந்த இளவேனில் காலம்!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading