” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
நிலாவில் உலா…
வண்ணத் திரையரங்கில்
வட்டநிலா பொட்டிடுமே
வளர்மதி உலாவிலே
வையமே மயங்கிடுமே

எண்ணற்ற உவமைக் கருவாகி மிளிரும்
வட்டநிலா வையத்தை. குளிர்வாக்கி தணியும்

தண்மதியின் நிகரிற்கு தனித்துவமே அழகு
வட்டநிலா கவிதைக்கு வரமான உறவு

கைக்குழந்தை உணவூட்ட கதையாகும் நிலாவே

தன்னெழில் உன் உதயம் மிகையாகும் மிடுக்கே.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan