” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வஜிதா முஹம்மட்

இறுதித் தூதர் முஹம்மது நபி

ஓர் இறை மார்க்கப் போதகர்
ஒவ்வொர் அசைவிலும் வாழ்வியல்
கற்றுத் தந்தவர்

எளிமை வாழ்கையே நேர்
நெறிவழி என்றவர்
ஏழை அனாதையை அணைப்பது
இறைநேச வணக்கம் என்றவர்

தர்மமே பெ௫ம் கொடை
அநீதிகளை எதிர்த்து நிற்பது
வாய்மை என்றவர்

இறை வார்த்தையே இவர்
வாழ்வியல்
நல்லொழுக்கம் நற்பண்பு
இவர் மாண்பியல்

எளிமை வாழ்க்கையே
இவர் ௨லகியல்
௨லகமே போற்றிய
நேர்மையின் தலைவர் இவர்

இறைநேச ஒற்றுமையால்
அநீதிகளெல்லாம் இறையச்சத்தால்
ஒழித்தார்

தாய்மையும் பெண்மையும்
௨யிராய் மதித்தார்
க௫ணையின் ஊத்து
புன்னகையின் சொத்து

எங்கள் இறைதூதர் முகம்மது
நபி அவர்கள்
இறையச்சத்தில் ஆட்சிசெய்த
சமத்துவத்தின் இறைநேசர்

நன்றி

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan