” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வதனி தயாபரன்

எம் ஜனனமும் மரணமும் இணைக்கும் வாழ்க்கைச் சங்கிலிகள் தொடர்கின்ற நம்பிக்கை
உழைக்கின்ற முயற்சிக்கு போராட்ட வாழ்க்கைக்குள் தேடல்கள் நம்பிக்கை

கனவுக்கு கற்பனைக்கும் நியத்தோடு சங்கமிக்க உணர்வோடு நம்பிக்கை

செயல் புலன் அற்ற தெய்வக் குழந்தைகள் நித்தம் வாழ்வே நம்பிக்கை

அன்றாடம் கூலி வயிற்று புலப்பு காய் வியர்வைத் துளியே நம்பிக்கை

நோய் பிணியில் படுத்தாலும் பாயோடு தேய்ந்தாலும் நாளை விடியும் காத்திருப்பது நம்பிக்கை

ஓடுகின்ற பாதையில் தடைக்கல்கள் ஆயிரம் இருந்தாலும் எட்டுகின்ற இலக்கை தொடும் வரை நம்பிக்கை
தோல்விகளை கை கொடுத்து சோதனைகளை கடந்து சாதனைகளை படைப்பேன் என்று நம்பிக்கை

நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைத்ததே நம்பிக்கை

நம்பிக்கை விதையை விதைத்து விட்டால் இன்று ஒரு நாள் மரமாகி கனியாகும் காத்திருப்போம்
விடாமுயற்சிக்கு கடின உழைப்பையின் கையிலேந்தி முயற்சி என்று நம்பிக்கையில் ஒளி விளக்கு ஏற்றினால் வாழ்வில் ஒளிமயமாகும்

நன்றி வணக்கம் வதனி தயாபரன்

Nada Mohan
Author: Nada Mohan