கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

வர்ண வர்ணப் பூக்களே..

வசந்தா ஜெகதீசன்
வர்ண வர்ணப் பூக்களே..
அழகு நிறைந்த அவதாரம்
அவனிக்கு வர்ணம் ஆதாரம்
எழிலில் மனதைக் கவருமே
எங்கும் பூக்கள் மலருமே
ஒற்றை நாளில் உயிர்வாழும்
ஓவ்வொரு செயலிலும் இணைவாகும்
மணமும் நிறமும் உரித்தாகும்
மலர்ச்சியில் மகிழ்ச்சி நிறைவாகும்
பற்பல நிறத்தில் பூக்களே
பாரை நிறைக்கும் அழகில்
பார்ப்போர் மனதை திருடியே
பயணிக்கும் பூக்கள் பேரழகு
மருந்தாய், மலர்கொத்தாய் பூசை முதலாய் வாழ்வின் வரமாய்
என்றும் தனக்கெனத் தனித்துவமாய்
வர்ணஜாலம் தேவதையாய்
வாழ்வில் ஒன்றித்தே வாழ்வது
வர்ண வர்ணப் பூக்களாய்
காசினி எங்கும் எழிலோடு
மனதை மயக்கும் மலரினமே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading