பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வலியதுவோ முதுமை !

வலியதுவோ முதுமை ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.03.2024

வாழ்க்கைப் பயணமதில்
இளமைக்காலம் இதமாக
இளமைத் துடிப்போடு கடந்துவிட
அனுபவங்களின் முதிர்வில்
ஆட்டம் இழந்த நிலையில்
வெந்துபோன நெருப்பின் தணலாக
நொந்து போகுதே இதயங்கள் முதுமையில்
வலியதுவே முதுமை !

குழந்தைகளைப் பெற்றவலி சுமந்தவலி
குடும்பத்திற்காய் உழைத்த வலியென
இளமைக் காலத்தை அசைபோட
இடுப்புவலி கால்வலி கைவலியென
நோயினைச் சுமந்த வலியாக முதுமைக் காலமதில்
தனிமையும் வாட்ட தொடருமே வலிகளும் !

உடலில் உணர்வில் உறவில் மாற்றம்
உடலும் தளர உளமும் சோர
கடந்து போகுது காலமும்
முதுமையை நோக்கி
முதுமை வரமா? இல்லை
முன்னோர் இட்ட சாபமா?
இளமையின் ஆட்டத்திற்கு
முதுமை ஓர் பாடமே !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading