பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வலியதோ முதுமை

Selvi Nithianandan (608) 28.03.2024
வலியதோ முதுமை
காலமும் வேகமாய் நகர
ஞாலமும் மாற்றமாய் சேர
சோகங்கள் பலதாய் தொடர
சோர்ந்திடும் சரீரம் உணர

வெளியிலே நடையும் இன்றி
வெயிலும் வரவும் குன்றி
வீட்டிலே சோர்வாய் தூக்கம்
விடிந்தால் எழுவதால் ஏக்கம்

மூட்டு முதுகு வலியாய்
காலும் வீக்கம் நோவாய்
படுக்கை இல்லா விழிப்பாய்
பயமும் துரத்த நினைப்பாய்

மூப்பு இன்றும் நிலையாம்
முனகும் செயலில் தொல்லையாம்
தீர்ப்பு அதுவே இல்லையாம்
தீர்க்க முடிவே வலியாகுமா?

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading