வலியதோ முதுமை

வலியதோ முதுமை

வழியது கிடைக்க வரமாகும் வாழ்வு
வலியது போக்கி வளம்காணும் மாண்பு
பழியது பேசா பௌவியம் கொண்டு
தளிரது போல தழைத்திட வேண்டும்

நறுமலர் பூவாய் நமதிளம் வாழ்வு
முதுமையின் கோலம் முனைப்பாகும் ஒருநாள்
கடுகதி வாழ்வு கரைந்திட நாளும்
கணமொரு காரியம் கைகூடும் வேளை

வலியது முதுமை அல்ல
வளம் காணுமே நல்வாழ்வு
பிறந்தவர் இறப்பர் நியதியின் இயல்பு
பிறப்பிலும் வாழ்வு புதுமையின் பொக்கிசம்

;வலியல்ல முதுமை வசந்ததின் வார்ப்பு
நதிபோல ஓட நமக்கொரு பருவம்
நாளைய வலியும் நமக்காக பிறக்கும்
நனியொரு வரமாய் வலிமை பெற்றிடுவோம்

நகுலா சிவநாதன் 1755

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading