” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வலியதோ முதுமை

காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம்
இளசுகள் முதியோரை பழசுகள் எனவிழிக்குமாம்
இளமை என்றும் நிரந்தரமில்லை நிஜம்
எல்லோரும் முதுமையடைவதே நியதி
குழந்தையாகி குமரியாகி தாரமாகி தாயாகுவது
குழந்தையாகி குமரனாகி கணவனாகி அப்பாவாவது
அப்பா பேரனாவது அம்மா பேத்தியாவதும்
முதுமையின் நுழைவாசல் முதலடி ஆகும்
இளமையில் இனம்தெரியாத கனவு வரும்
இளமை வாழ்க்கையே ஒரு வசந்தம்
நடுத்தர வாழ்க்கையோ பொறுப்பு அதிகம்
நல்லவை நடக்கையில் அது ஒருசுகந்தம்
வருடம் உருண்டோட உடல் நிலையும் மாற
வயதும் போகும் பலமும் குறையும்
முன்பிருந்த மிடுக்கும் திடமும் குறைய
முதுமை அங்கே எட்டிப் பார்க்கும்
முதுமையை யாரும் வலிந்து எடுப்பதுல்லை
காலநேரம் பார்த்து அதுதானாகவே வரும்
முதுமை வந்தால் வலியும் கூட வரும்
முதுமையை வெனுக்காது அவரை அன்பாக
அரவணைத்து ஆறுதல் கொடுக்க வேண்டும்
அவர்கள் எம்மூத்தவர்கள் முழுமையாக
எம்மைத் தாங்கியவர்கள்
நாமவரை மதித்து வரவேற்று தடப்போம்

Nada Mohan
Author: Nada Mohan