” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வாழுங்காலம்

நகுலா சிவநாதன்

வாழுங்காலம்

பட்டு வண்ணச் சேலைகட்டி
பாதை யொன்று வரவழைத்து
கெட்டி மேளம் கொட்டிடவே
கீதா உந்தன் கரம்பிடித்தேன்
சொட்டுத் தேனும் மெல்லவிழும்
சொர்க்கம் காணும் வாழ்வுமிது
கட்டி பழமாய் உன்னழகில்
கண்ணன் நானும் மயங்கிநின்றேன்

நட்டு வைத் வாழைமரம்
நாளை வாழ்வு உனைப்போலே
தொட்டு நானும் கட்டித்தாலி
தோகை உந்தன் கழுத்தினிலே
எட்டு மட்டும் எம்வாழ்வு
எல்லை வகுத்து ஓடிடட்டும்
கட்டும் கூந்தல் அழகினிலே
கன்னி நீயும் வாழ்ந்திடுவாய்

வாழும் வாழ்வு வனப்புத்தரும்
வண்ண வடிவம் கொடுத்துவிடும்
கூழும் சேர்ந்து குடித்தாலும்
குடும்ப வாழ்வு மகிழ்வுபெறும்
தாழ்வே யெமக்கு வந்தாலும்
தக்க பாடம் படித்துநாமும்
மாழும் காலம் வசந்தமாக
மகிழ்ந்து நாமும் வாழ்ந்திடுவோம்

நகுலா சிவநாதன் 1771

Nada Mohan
Author: Nada Mohan