இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வாழ்வில் கலை “யும் தொடரா நிலை ” யும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

06.02.25
ஆக்கம் 177
“வாழ்வில் கலை “யும்
தொடரா நிலை ” யும்

நிலை மாறும் உலகில்
நீண்ட வாழ்வில் -பல
பண்டைய கலைகளோ
நின்ற இடம் தெரியாது
தடம் புரண்டு மெல்ல மெல்லக் குறைந்து
கொண்டனவே

குதூகலம் தந்த நாட்டுக்
கூத்தும் துள்ளலுடன் வந்த வில்லுப்பாட்டும்
கொட்டகையில் அரங்கேறிக் கை
கொட்டி ஆரவாரித்த
நாடகமும் மருகி
நீண்ட பெருமூச்சுடன்
மாண்டனவே

கற்பனை மிதந்து உயிர்
கொடுத்த கலை வடிவம்
ஓவியமே வரையாது
போனதால் கண்ணீரில்
கரைந்து கவலையுடன்
காணாமல் போனதே

கல்லிலே சிலை வடித்த
சொல்லின் பெருமைத்
தமிழன் இசை மீட்டிய
கருவிகள் நரம்பு, தோல்,
துளை, தாளம் தன்
பயன்பாடு மறந்து
வாழ்வில் கலையும்
தொடரா நிலையும்
நினைந்து நினைந்து
ஒரு மூலையில் முடங்கித் தூங்கிக்
கொண்டதே.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading