23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
வாழ்வில் கலை “யும் தொடரா நிலை ” யும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
06.02.25
ஆக்கம் 177
“வாழ்வில் கலை “யும்
தொடரா நிலை ” யும்
நிலை மாறும் உலகில்
நீண்ட வாழ்வில் -பல
பண்டைய கலைகளோ
நின்ற இடம் தெரியாது
தடம் புரண்டு மெல்ல மெல்லக் குறைந்து
கொண்டனவே
குதூகலம் தந்த நாட்டுக்
கூத்தும் துள்ளலுடன் வந்த வில்லுப்பாட்டும்
கொட்டகையில் அரங்கேறிக் கை
கொட்டி ஆரவாரித்த
நாடகமும் மருகி
நீண்ட பெருமூச்சுடன்
மாண்டனவே
கற்பனை மிதந்து உயிர்
கொடுத்த கலை வடிவம்
ஓவியமே வரையாது
போனதால் கண்ணீரில்
கரைந்து கவலையுடன்
காணாமல் போனதே
கல்லிலே சிலை வடித்த
சொல்லின் பெருமைத்
தமிழன் இசை மீட்டிய
கருவிகள் நரம்பு, தோல்,
துளை, தாளம் தன்
பயன்பாடு மறந்து
வாழ்வில் கலையும்
தொடரா நிலையும்
நினைந்து நினைந்து
ஒரு மூலையில் முடங்கித் தூங்கிக்
கொண்டதே.
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...