09
Jul
நேவிஸ் பிலிப் கவி இல(630)
வெற்றிகளைப் பெற்றுக் கொள்
தோல்விகளைக் கற்றுக் கொள்
இன்றைய் விடியலுக்காய் ஏங்கிடாதே
நாளை...
08
Jul
சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..
ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026
பச்சைப்புல்வெளி போர்க்களமாக
பந்து மட்டும் ஆயுதமாக
வீரர்கள் கால்களோ பம்பரமாக...
08
Jul
நடிப்பது மானிடம்!!!
தினக்கவி-2365
நடிப்பது மானிடம்..!!
செய்வதெல்லாம் செய்துவிட்டு
பொய் தான் உரைத்திடுவார்
போதுமென்ற அளவிற்கு
நாடகமாய் நடித்து வெல்லுவர்
பச்சைப் பிள்ளை...
வாழ்வில் கலை “யும் தொடரா நிலை ” யும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
06.02.25
ஆக்கம் 177
“வாழ்வில் கலை “யும்
தொடரா நிலை ” யும்
நிலை மாறும் உலகில்
நீண்ட வாழ்வில் -பல
பண்டைய கலைகளோ
நின்ற இடம் தெரியாது
தடம் புரண்டு மெல்ல மெல்லக் குறைந்து
கொண்டனவே
குதூகலம் தந்த நாட்டுக்
கூத்தும் துள்ளலுடன் வந்த வில்லுப்பாட்டும்
கொட்டகையில் அரங்கேறிக் கை
கொட்டி ஆரவாரித்த
நாடகமும் மருகி
நீண்ட பெருமூச்சுடன்
மாண்டனவே
கற்பனை மிதந்து உயிர்
கொடுத்த கலை வடிவம்
ஓவியமே வரையாது
போனதால் கண்ணீரில்
கரைந்து கவலையுடன்
காணாமல் போனதே
கல்லிலே சிலை வடித்த
சொல்லின் பெருமைத்
தமிழன் இசை மீட்டிய
கருவிகள் நரம்பு, தோல்,
துளை, தாளம் தன்
பயன்பாடு மறந்து
வாழ்வில் கலையும்
தொடரா நிலையும்
நினைந்து நினைந்து
ஒரு மூலையில் முடங்கித் தூங்கிக்
கொண்டதே.
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...