” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

விடியாத இரவொன்று 14.03.2024

விடியாத இரவொன்று (606)

தள்ளாத வயதினிலே தளராத மனதோடு
தட்டுத் தடுமாறும் தடியோடு நடமாட்டம்
தக்கசமயம் வந்தாலே தன்னாலே பயமாகும்
தங்க வழியின்றி கண்ணீரும் தாரையாகும்

மூத்தோர் வாழ்ந்திட்ட சரிதம் ஒன்று
வரலாறாய் கிடைத்திட்ட பொக்கிஷம் நன்று
முன்பின் முரணாய் முனகும் இன்று
முழுதாய் முடங்கிடா முதுமை ஏக்கமாகும்

மூத்தோர் சொல்லின் வார்த்தை அமுதம்
முழுமதி நிலவின் ஒளிர்வின் சரிதம்
மூச்சுப் பேச்சாய் இணைவின் சிறப்பும்
முதுமைகூட தனித்து விடாத பொறுப்பாகும்

விடியாத இரவொன்று விடியலைத் தேடியே
முடியாத போதும் முடியுமே உன்னாலே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading