விடியாத இரவொன்று 14.03.2024

விடியாத இரவொன்று (606)

தள்ளாத வயதினிலே தளராத மனதோடு
தட்டுத் தடுமாறும் தடியோடு நடமாட்டம்
தக்கசமயம் வந்தாலே தன்னாலே பயமாகும்
தங்க வழியின்றி கண்ணீரும் தாரையாகும்

மூத்தோர் வாழ்ந்திட்ட சரிதம் ஒன்று
வரலாறாய் கிடைத்திட்ட பொக்கிஷம் நன்று
முன்பின் முரணாய் முனகும் இன்று
முழுதாய் முடங்கிடா முதுமை ஏக்கமாகும்

மூத்தோர் சொல்லின் வார்த்தை அமுதம்
முழுமதி நிலவின் ஒளிர்வின் சரிதம்
மூச்சுப் பேச்சாய் இணைவின் சிறப்பும்
முதுமைகூட தனித்து விடாத பொறுப்பாகும்

விடியாத இரவொன்று விடியலைத் தேடியே
முடியாத போதும் முடியுமே உன்னாலே

Nada Mohan
Author: Nada Mohan