திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

விரல் நுனி அறிவியல்

சிவதர்சனி இராகவன்

விரல் நுனியில் அறிவியல்…!

வியாழன் கவி 2012!

ஆற்றங்கரை ஓரங்களில்
ஆழமாய் வளர்ந்த நாகரீகம்
அளித்த வளங்களில் ஒன்றே
எழிச்சியாய் வளர்ந்த அறிவியல்
மானிடத் தேடலும் முயற்சியும்
மண்ணில் எத்தனை கண்டுபிடிப்பு..

மகத்தான சாதனை யாவுமாய்
மரணத்தையும் தாண்டி வாழுதே
அண்டவெளி தொடக்கம் அதல்
பாதாளம் வரைக்கும் தொடர
விந்தை மிகு விஞ்ஞானமும்
அசுர வளர்ச்சி கொண்டதே..

உள்ளங்கை உரசலில் பொறி
அள்ளித் தருமே எத்தனை வசதி
இருக்கும் இடத்தில் நகராதே
இணைக்கும் இணையமும் நமை
கற்றல் படைத்தல் விற்றல் விருது
பற்பல ஆளுமை விரல் நுனிக்குள்..

பிறந்திடும் குழந்தையும் சாதிக்கும்
இறப்பின் பின்னும் போதிக்கும்
காலத்தின் கால்களின் சுழற்சியே
நன்மையும் தீமையுமாய் கலக்குது
நாளைய உலகின் நிலையும் இது
கோழையல்ல அறிவியல் விரல் நுனி..!
சிவதர்சனி இராகவன்
25/7/2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading