” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

“விலையில்லா வாழ்க்கையிலே”

நேவிஸ் பிலிப் கவி இல (573)

சுற்றாமல் நிற்கும் புவிப் பந்தில்
நிகழ்கின்ற அதிசயம் ஏராளம்
போர்கள் ஒரு பக்கம்
ஆட்சியைப் பிடிக்க
மாயக் காட்சிகள் மறு பக்கம்

இயற்கை அழிவுகள் ஒரு புறம்
இலஞ்சமும் வஞ்சமும் மறு புறம்
மக்கள் அவதியுற , நாளும் நிகழும்
அச்சுறுத்தல்கள் உச்சமாக

அமைதியும் ஆத்ம திருப்தியும்
அவ்வப்போது வந்து போக
அரசியலின் தாக்குதல்கள்
வறுமைப் பிடியகல ஆங்காங்கே
போராட்டங்கள்

நீதியின் தராசுகள் சாய்வது
எந்தப் பக்கம் என்பது
யாருக்கும் புரியாமலே
கண்கட்டு வித்தையென

அமுலாக்கல் துறையின் சிறப்பு
புலனாய்வுத் துறையின் உளவு
விரைந்தோடும் வாகனப்பயணம்
நிலையில்லா வாழ்க்கைக்கு
விலை பேசும் அவலம்
வேறுபாடும் பாகுபாடும்
எல்லாமும் சமமே இங்கு
நன்றி,,,,,,,,,,,,,

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading