வைகாசி வந்தது 2192 ஜெயா நடேசன்

2008 ம் மாதம் வைகாசி 18ம் நாள்
மலர்களின் மலர் வாசனையோடு
பல வர்ண பூக்கள் காட்சியாக
எம் மண் மறக்க முடியாத மாதம்
பல இழப்புகள் பிரிவுகளின் மாதம்
ஏதிலியாய் எம்மினம் ஆக்கப்பட்ட மாதம்
மாற்றாளியாய் மாற்றப்பட்ட மாதம்
மன நோயார்களை உருமாறிய மாதம்
இளையோர் பெரியோர் கர்ப்பிணிகள்
சிறையெலாம் நிறைக்கப்பட்ட மாதம்
இறந்தோரை புதைக்க படாத மாதம்
சுதந்திரக்காற்றை சுவாசித்தவர்கள்
நச்சுப் புகையை சுவாசித்து இறந்தோர்
விதி வரைந்த நாள் கறுப்பு வைகாசி 18

Jeya Nadesan
Author: Jeya Nadesan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading