மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ஷர்ளா தரன்

பாமுகம் பாரா முகம்
ஓரம் காட்டாது ஒன்றாய் சேர்க்கும் முகம்
பாரில் உதித்து பல ஆண்டு கண்ட முகம்
சேருவோரை ஒன்றாய் சேர்க்கும் முகம்
நீ வாழி பல்லாண்டு வாழி

கவிக்கு ஒரு பாதை
கவிதை விரும்பிக்கு ஒரு வளம்
வாரத்துக்கு ஒன்று
வரி வரியாய் தலைப்புகள் கண்டு
மாரி வெள்ளம் போல்
மடையாய் ஓடும் பா
தடுக்கி விழுந்தோரை
தட்டி எழுப்பும் முகம்
பாமுகம் நீ வாழி
பல்லாண்டு வாழி

உதட்டில் தவழ்வதை
ஊரறிய வைக்கும் முகம்
மனதின் எண்ணத்தை
மனங்களில் பதிக்கும் முகம்
கனத்த இதயத்திற்கும்
கனிவுதரும் உன் கவி
பனித் துளி போல்
படரும் உன் கவி
நீ வாழி
பல்லாண்டு வாழி

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading