” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஷர்ளா தரன்

நீண்ட இடைவெளியின் பின்
அனைவருக்கும வணக்கம்

மாசி
முழங்கால் வரை பாய்ந்த வெள்ளம்
கணுக்கால் வரை போய் கரைஒதுங்கிட
மாசிப்பனி அது வந்திடுமே
மூசி் அதன் வீரத்தை காட்ட
பேசவார்த்தை இல்லை
பேசாமல் போகவும் முடியவில்லை

தளிர்த்த அறுகின்மேல்
தத்துருவமாய் வந்தமர்ந்து
பரந்த வெளியில் பஞ்சாய் படர்ந்திருக்கும்
மெல்லிய சூரியக்கதிர் மேனி தடவிட
மெல்லமாய் நழுவி
நல்லவனாய் தரைக்குள் போகும்
நல்ல காலையை இதமாய் தந்திடும்
மகத்தான மாசி அது

மாசிப் பொங்கல்
மாசி மகம்
தைப்பூசம்
பூத்த நெல்லில் இருந்து புதிர் எடுத்து பொங்கல் அதில் பொங்கி
காத்திருந்து கடவுளுக்கு படைத்து
வேர்க்க விறு விறுக்க
வேலை செய்த விவசாயி
வேதனையோடு வேண்டி நிப்பான்
வெகுவான விளைச்சலுக்காய்
தைப்பூசநாளில்
மா பெரும் மாசியில்

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan