பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி.பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர்🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 156

தலைப்பு — இலக்கு

நல்லதையே நினைத்து நம்பிக்கையுடன் உழைத்து
நல்லுயர்நிலை இலக்கை நாட்டிடின் ஆங்கு
செல்வமாய் பெரும்புகழ் சேர்வதோடு வருவரது
வல்லவரென்ற நற்பெயரும் வாழும் நீடு!

அழுக்காய் மோசடிகள் ஊழலுடன் இணைந்திருக்க
பழுத்ததும் மற்றதும் அழுக்குள் விழமுயற்சிக்க
அழுக்கை அகற்றிடும் இலக்குடன் துணிந்து
முழுமனதுடன் முயற்சித்தால் முளைத்திடும் நற்சூழல்.

மனதைச் சுத்தமாய் மகிழ்வுடன் வைத்து
பணத்துக்காய் நேர்மையை பயிரிடாது பாதுகாத்து
உணர்ந்து மரியாதையுடன் அனைவரையும் மதித்து
அன்புகாட்டி ஆதரவளித்தால் உதயமாகும் நல்லமைதி.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
03/01/2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading