நகுலா சிவநாதன்

தடைகளை எதிர்த்து முன்னேறு

தடைகள் எதிர்த்து முயன்றே!
தகுதியை வளர்த்துக் கொண்டிடுக!
படைகள் போலத் தடையும்
பலமாய் வந்து மோதினாலும்
நடையாய் வரும் நம்பிக்கை
நாளை பெருகும் தடையுடைத்து
குடைபோல் விரியும் குணமே
குலமாய் விளங்கும் நல்லறிவாய்

அல்லும் பகலும் உழைத்தே
அனைத்தும் ஆக்கு அறுவடையாய்
சொல்லும் செயலும் துணிவாய்த்
தொடரும் பயத்தைக் களைந்திடுக!
கல்லும் சொல்லும் கவிபோல்
கன்னித் தமிழும் மின்னிடுமே!
வெல்லும் இந்த உலகில்
வேராய் அறுப்பாய் தடைதனையே!

வார்க்கும் முகிலும் மழையாய்
வாடும் பயிர்க்கு நன்நீரே!
பார்க்கும் காட்சி படமாய்
பாலம் போடும் நுண்மாட்சி
ஏருடன் உழவன் பாடும்
ஏற்றமே காணும் நன்மாட்சி
பாருடன் படுமே முயற்சி
பாதையை அமைக்க துணிந்திடுநீ

நகுலா சிவநாதன் 1648

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading