20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
நகுலா சிவநாதன்
தடைகளை எதிர்த்து முன்னேறு
தடைகள் எதிர்த்து முயன்றே!
தகுதியை வளர்த்துக் கொண்டிடுக!
படைகள் போலத் தடையும்
பலமாய் வந்து மோதினாலும்
நடையாய் வரும் நம்பிக்கை
நாளை பெருகும் தடையுடைத்து
குடைபோல் விரியும் குணமே
குலமாய் விளங்கும் நல்லறிவாய்
அல்லும் பகலும் உழைத்தே
அனைத்தும் ஆக்கு அறுவடையாய்
சொல்லும் செயலும் துணிவாய்த்
தொடரும் பயத்தைக் களைந்திடுக!
கல்லும் சொல்லும் கவிபோல்
கன்னித் தமிழும் மின்னிடுமே!
வெல்லும் இந்த உலகில்
வேராய் அறுப்பாய் தடைதனையே!
வார்க்கும் முகிலும் மழையாய்
வாடும் பயிர்க்கு நன்நீரே!
பார்க்கும் காட்சி படமாய்
பாலம் போடும் நுண்மாட்சி
ஏருடன் உழவன் பாடும்
ஏற்றமே காணும் நன்மாட்சி
பாருடன் படுமே முயற்சி
பாதையை அமைக்க துணிந்திடுநீ
நகுலா சிவநாதன் 1648
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...