பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு —160

தலைப்பு — இன்சொலால் பலரையும் கவர்ந்து.

பொறாமைப் புகையால் பொறாமை உருவாகுது
வராமை தராமையால் வாட்டம் வரவாகும்
இராப்பகல் துயரால் இன்னல் இணைவாகுது
இராது தொல்லைகள் இவற்றை அகற்றிடின்.

வெறுப்பால் கோபம் வெளிவரும் நெருப்பாய்
நெருக்குமிது அமைதியை உருக்கும் உண்மையை
பெருக்கும் பகையால் பலாத்காரம் மிகையாகும்
பொறுமையுடன் நடந்து பெறுவீர் நிம்மதி.

பணிவுடன் இன்சொலால் பலரையும் கவர்ந்து
துணிவுடன் பேராசைத் துயரைக் களைந்து
மனிதப் பண்புடன் மேன்மையுற உழைத்து
புனிதமாய் புவியில் பெருமையுடன் வாழ்வீர்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(01/02/2022)

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading