பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 163
மனமே சாந்தி அடைவாய்

மனமே மனமே உறங்கா மனமே
தினமும் தினமும் வருந்தும் மனமே
காலம் காலம் கனவு காணும்
இதுவும் இதுவும் கடந்து போகும்

ஆழ்மனக் கடலின் அலைகள் ஓயும்
என்மனக் கோயில் அமைதி காணும்
உயிரும் மெய்யும் ஓன்று சேரும்
துன்பம் நீங்கி இன்பம் பெருகும்

இலையும் உதிரும் துளிர்த்து வளரும்
மனதில் கூட துணிவும் பிறக்கும்
உறவும் மிளிரும் உணர்வும் சேரும்
உலகம் முழுவதும் என் வசமாகும்

ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading