சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கனவுகளின் சிறகுகள்

நகுலா சிவநாதன் கனவுகளின் சிறகுகள் கனவுகள் கண்களில் தோன்றினாலும் அவை மனதின் சிறகுகளாக விரிகின்றன நினைவுகள் நம்பிக்கைத் தடத்தை...

Continue reading

சிவா சிவதர்சன்

“சாந்தி”

பணம் பாதாளம் வரை பாயும்,நம்புகிறது உலகம்.
கேட்டவிலை கொடுத்தும் மனதில் அமைதிகிட்டாத அவலம்.
என்று மனம் நிறையும், அன்று சாந்தி நிலவும்.
மும்மலங்களும் வென்ற ஆன்மா,பிறவிப்பிணி அகலும்

சாந்திதேடி அலையும்கூட்டம் நாளும் பெருகக்கண்டோம்.
சாந்தி நிலையம்ஊருக்கொன்று நிறுவ முயல்வோம்.
உணவின்றித்தவிப்போருக்கு அன்ன சத்திரங்கள் ஆயிரம் படைப்போம்.
ஊனமுற்ற மாந்தர்காய் உதவும் காப்பகங்கள் அமைப்போம்.

இரந்துண்டு வாழும் ஈன்றோருக்கு, ஈயாதபிள்ளைகள் இருந்தென்ன லாபம்.
குமுறும் எரிமலையும், ஒருநாள் அமைதியாகும் அவாக்கொண்ட மனித மனம் மட்டும் அடைவதில்லை சாந்தி.
அவாத்துண்டும் ஜம்புலன்கள் அடங்கும்போது அங்குநிலவும் சாந்தி
நாளைய வாழ்வு நம் கையில் இல்லை ஆசைக்கனவுகளோ ஆயிரம்
பேரின்பமடையும் மார்க்கம் மனதில்கொண்டதில்லை எங்கனம் ஆகும் சாந்தி!

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan