பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ரஜனி அன்ரன்

“ துளிநீர் “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 24.03.2022

நீலவானத் திரை விலத்தி
வான்மகளை முத்தமிட்டு
வானம் விட்டு மெல்லக் கீழிறங்கி
கதிரவன் ஒளியில் கண்சிமிட்டி
கடலலையில் மோதித் தெறித்து
காற்றின் வேகத்தில் திவலையாய் சிதறி
துளித்துளியாய் நிலத்தில் விழுமே மழைத்துளி !

அண்டத்தை எழுபது வீதத்தில் ஆட்சி செய்து
கண்டங்கள் எல்லாம் நிறைந்து
அகிலத்தை அசைத்தும் இசைத்தும் நின்று
துளிநீராய் மண்ணில் விழுந்து பெருவெள்ளமாகி
ஏரி குளங்களை நிறைத்து வனப்பாக்குமே
துளிநீரையும் வீணாக்காது மழைநீரைச் சேமித்து
புவித்தாய்க்கு வளம் சேர்ப்போம் !

வேளாண்மை செழிக்க விளைச்சல் பெருக
வழி காட்டுமே துளி நீர்ப்பாசனம்
இன்றும் உலகின் கடைக் கோடிகளில்
துளிநீரின்றி குடிநீருக்காக மக்கள் தவிப்பு
விழிநீர் துடைக்கும் துளிநீர்த் திவலையே
நீ இல்வையேல் நாம் இல்லையே
இன்னுயிர் காக்கும் உயிராயுதம் நீயே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading